சென்னை: மியன்மாருக்கும் சென்னைக்கும் இடையே நேரடி விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மியன்மாரில் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர்.
எனினும், அந்நாட்டுக்கு தமிழகத்திலிருந்து நேரடி விமானச் சேவை இல்லை என்ற குறைபாடு நீடித்து வந்தது.
இந்நிலையில், மியன்மார் ஏர்வேஸ் நிறுவனம் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அந்நாட்டின் யங்கூன் நகருக்கும் தமிழகத் தலைநகர் சென்னைக்கும் இடையே புதிய விமானச் சேவையை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.
சனிக்கிழமையன்று (6 மே) யங்கூன் நகரிலிருந்து புறப்பட்ட விமானத்தில் 48 பயணிகள் சென்னை சென்றனர்.
சென்னை அனைத்துலக விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த அந்த விமானத்துக்கு இருபுறமும் தண்ணீர் பாய்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது.