தமிழ்

மத்தியப் பொது நூலகத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி பிற்பகல் 2 முதல் 4 மணி வரை, ‘சிங்கப்பூர்ச் சிறுகதை நூற்றாண்டு (1924-2024): ஒரு வரலாற்றுப் பார்வை’ எனும் கலந்துரையாடல் நடைபெற்றது. அதை எழுத்தாளர் சிவானந்தம் வழிநடத்தினார்.
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடனான கலந்துரையாடல், ஏப்ரல் 22ஆம் தேதி இரவு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகத்தின் ஏற்பாட்டில் தேசிய நூலகத்தின் ஐந்தாம் மாடி ‘பாசிபிலிட்டி’ அறையில் நடைபெற்றது.
‘தமிழ் இலக்கியங்கள் கூறும் தாவரங்களில் சிங்கையில் காணப்படுபவன’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு, கேலாங் செராய் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) நடைபெற்றது.
‘தமிழ் தந்த வாழ்வு’ என்ற நூலின் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான ‘அக்னி 2024’ நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலையும் புதுமையையும் வெளிப்படுத்தி வியக்க வைத்தனர்.