சிங்க‌ப்பூர்

தைப்பூசத் திருவிழாவின் முந்தைய நாளான நேற்று, (ஜனவரி 24) காலை 5 மணியளவில் வெள்ளி ரதம் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலிலிருந்து புறப்பட்டு, சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சற்று நேரம் நின்று, பின்னர் கியோங் செய்க் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்தைச் சென்றடைந்தது.
வயதான தன் தாயை தலையணையை வைத்து மூச்சுத் திணறச் செய்து கொலை செய்ய முயன்றதாக ஆடவர் ஒருவர்மீது புதன்கிழமை (ஜனவரி 24) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
மூவர் இணைந்து செயல்பட்ட மோசடி முதலீட்டுத் திட்டத்தில் இருவர் மொத்தம் $541,000 இழந்தனர். இதில் காங் சீ வீ, லிம் ஜுன் ஹோங், 35, ஆகிய இருவர் மீதும் ஜனவரி 24ஆம் தேதி தலா நான்கு ஏமாற்றுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தீவிர சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு வெளிநாடுகளில் தாக்குதல்களை நடத்துவதில் ஆர்வமாக இருந்த உயர்நிலை 4ஆம் வகுப்பு மாணவருக்கு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 2023 நவம்பர் மாதம் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஒரு நாட்டில் பல்வேறு சமயத்தினருக்கு இடையே நல்லிணக்கமான சூழல் நிலவுவது ஆச்சரியமானது. விலை மதிப்பில்லாதது.