என்டியுசி

தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தனது உறுப்பினர் எண்ணிக்கையை கடந்த 3 ஆண்டுகளில் 30 விழுக்காட்டிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்று புதன்கிழமை (மே 1ஆம் தேதி) அதன் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் கூறினார்.
பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான அரசாங்கம், ஊழியர்களின் தேவைகளையும் அக்கறைகளையும் கையாண்டு அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகக் கொடுத்திருந்த வாக்குறுதிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியிருப்பதாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) தலைவர் கே.தனலெட்சுமி பாராட்டியுள்ளார்.
சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்குத் தொழிலாளர் இயக்கத்தின் முழு ஆதரவு இருப்பதாக தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டிலிருந்து நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் மூலம் 200,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொண்டதாகத் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்ப அம்சங்களால் பாதிக்கப்படும் அலுவலக ஊழியர்களுக்குத் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டப்போவதாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) உறுதியளித்துள்ளது.