சிங்கப்பூரிருந்து லண்டனுக்குச் செல்லும் குவாண்டஸ் விமானம், ஏதோ ஓர் அவசரநிலையால் அஸர்பைஜானின் தலைநகர் பக்குவில் அவசரமாகத் தரையிறங்கியுள்ளது.
அவசரநிலைக்கான காரணம் தெரியவில்லை.
ஏர்பஸ் ஏ380 ரக விமானமான கியூஎஃப்1 (QF1), 2009 ஆகஸ்ட்டில் அதன் சேவையைத் தொடங்கியது.
வெள்ளிக்கிழமை (டிச. 23) அதிகாலை 12.44 மணிக்கு சாங்கி விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்டது.
விமானம் புறப்பட 49 நிமிடத் தாமதம் ஆனது.
சிங்கப்பூர் நேரப்படி காலை 10.15 மணிக்கு விமானம் அவசரநிலைக்கான 7700 எனும் குறியீட்டைத் தெரிவிக்கத் தொடங்கியது. விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் பல்வேறு இணையத்தளங்கள் இதைக் குறிப்பிட்டன.
ஜியார்ஜியா தலைநகர் டிப்ஆலிசி அருகே உள்ள ஆகாயவெளியில் விமானம் வந்த வழியே திரும்பிச் சென்றது.
சிங்கப்பூர் நேரப்படி காலை 11.07 மணிக்கு பக்குவில் உள்ள ஹெய்டர் அலியெவ் அனைத்துலக விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது.
இச்சம்பவம் பற்றி குவாண்டஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
இச்செய்தி பற்றிய மேல்விவரங்கள் கிடைத்தவுடன் தமிழ் முரசு தெரிவிக்கும்.