சென்னையில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்த மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஏப்ரல் 8) தமிழ்நாடு தலைநகரம் சென்னைக்குப் பயணம் மேற்கொண்டு அங்கு பல்வேறு நலத்திட்டங்களை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தார்.

சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை மாலை 5.15 மணி அளவில் திரு மோடி ஹைதராபாத்திலிருந்து சென்னை சென்றடைந்தார்.

பிரதமர் மோடியைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் பிரதமரை நேரில் வரவேற்றனர். 

அதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்துப் பார்வையிட்டார்.

அதையடுத்து, ஹெலிகாப்டரில் நேப்பியர் பாலம் அருகில் உள்ள அடையாறு ஐ.என்.எஸ். வளாகத்துக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலமாக சென்னை மத்திய ரயில் நிலையத்துக்குப் புறப்பட்டார்.

சென்னை மத்திய ரயில் நிலையத்தை அடைந்த பிரதமர் மோடி, சென்னையிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

‘வந்தே பாரத்’ விரைவு ரயிலுக்குள் சென்று பிரதமர் மோடியும் முதல்வர் ஸ்டாலினும் பார்வையிட்டனர்.

பிறகு விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.

விவேகானந்தரின் கொள்கைகளை நிறைவேற்ற இந்தியா பாடுபடுவதாக அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!