சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் செயல்பாடுகள் மே 1ஆம் தேதி முதல் 18 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும். போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் இதனை அறிவித்தார்.
விமான நிலைய இயக்குநர், சில்லறை விற்பனை குத்தகைதாரர்கள், விமான சேவை நிறுவனங்கள் உள்ளிட்டோருக்கான செலவுகளை விமான முனையம் மூடப்படுவதால் குறைக்கலாம் என்று கூறிய திரு கோ, தற்போதை விமானப் போக்குவரத்தைச் சமாளிக்க ஒரு முனையம் போதும் என்றும் குறிப்பிட்டார். மேலும் இந்த முனையம் மூடப்படுவதால், இரண்டாவம் முனையத்தில் தற்போது புதுப்பிப்புப் பணிகள் துரிதமடையும் என்றும் அவர் கூறினார்.
உலகளவில் அதிவேகமாகப் பரவி வரும் கொவிட்-19 கிருமித்தொற்றால் விமான பயணங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் சாங்கி விமான நிலையத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.