சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா இன்று மாலை கிருமிப்பரவல் தொடர்பிலான கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகிறது.
தீமிதி விழாவுக்கான கொடியேற்றம் அக்டோபர் 5ஆம் தேதியன்று நடைபெற்றது. இத்திருவிழா தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் நவம்பர் 5ஆம் தேதியுடன் முடிவடையும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் முன்னதாகத் தெரிவித்தது.
பூக்குழிக்கு எரியூட்டும் பணிகள் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கின. கரகத்தைத் தயாரிக்கும் மணி இன்று பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கியது.
மாலை 5 மணி அளவில் தலைமைப் பண்டாரமான திரு வேணுகோபால் திருநாவுக்கரசு பூக்குழியில் இறங்கினார்.
திருவிழாவின் நேரலைக்கான இணைப்பு:
(இந்தப் படங்கள் இந்து அறக்கட்டளை வாரியத்தின் நேரடி ஒளிபரப்புக் காணொளிலிருந்து எடுக்கப்பட்டவை)