புக்கிட் பாத்தோக் பேருந்து முனையத்தில் இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்குள்ளாயின. இந்த விபத்தில் பேருந்து ஒன்று பக்கவாட்டில் கவிழ்ந்தது.
டவர் டிரான்சிட் நிறுவனம் இயக்கும் இந்த இரண்டு பேருந்துகளுமே 945 சேவை எண்ணைக் கொண்டுள்ளன.
இன்று மாலை 5 மணி நேர்ந்த விபத்தில் இரண்டு ஓட்டுநர்களும் 14 பயணிகளும் காயமடைந்தனர். மற்றொரு பேருந்தில் அப்போது பயணிகள் இல்லை.
காயமடைந்தோரில் ஐவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டிருப்பதாக புக்கிட் பாத்தோ நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை தெரிவித்தார்.