கிருமித்தொற்று: ரோவெல் சாலை புளோக்கில் வசிப்போருக்கு பரிசோதனை

லிட்டில் இந்தியாவில் புளோக் 639 ரோவெல் ரோட்டில் உள்ள இரு வீடுகளில் 12 பேருக்கு கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (ஜூலை 15) தெரிவித்துள்ளது.

“தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் பணிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிருமி எவ்வாறு தொற்றியது என்பது பற்றிய விசாரணையும் நடைபெற்றது வருகின்றன,” என்று அது கூறியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த புளோக்கில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் கட்டாய கொவிட்-19 பரிசோதனையைத் தான் நடத்தவிருப்பதாக அமைச்சு கூறியது.

புளோக் 636 வீராசாமி சாலையில் உள்ள கூடாரப் பகுதியில் நாளை (ஜூலை 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பரிசோதனை நடத்தப்படும்.

பாதிக்கப்பட்ட அந்த புளோக்கிற்கு ஜூன் 30 முதல் நேற்று (ஜூலை 14) வரை சென்று வந்தவர்கள், அல்லது அங்கு வசிப்போருடன் தொடர்பில் இருந்தவர்கள் விருப்பப்பட்டால் சளி/எச்சில் மாதிரி பரிசோதனை செய்துகொள்ள பதிவு செய்யலாம்.

அவர்களுக்கான பரிசோதனைகள் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே நடத்தப்படும். பிரத்தியேக வட்டார பரிசோதனை மையங்களில் நாளையும் நாளை மறுதினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பரிசோதனை நடைபெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!