தொடக்கநிலை 3, 4 மாணவர்களுக்கு ஆண்டிறுதித் தேர்வுகள் ரத்து

தொடக்கநிலை 3, 4ல் பயிலும் மாணவர்களுக்கான ஆண்டிறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


சமூகத்தில் கொவிட்-19 பரவல் தொடர்ந்து கூடி வருவதையடுத்து, கல்வி அமைச்சு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.


சிங்கப்பூரில் கடந்த ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.


இதனால் ஏறக்குறைய 70,000 மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று அறியப்படுகிறது.


ஆயினும், பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுடன் தொடக்கநிலை 5 மாணவர்களுக்கான ஆண்டிறுதித் தேர்வுகள் நடத்தப்படும் என்று அமைச்சு தெரிவித்து இருக்கிறது.


தொடக்கநிலை 1, 2 மாணவர்கள் ஆண்டிறுதித் தேர்வு எழுதுவதில்லை.


வரும் 11ஆம் தேதி திங்கட்கிழமையில் இருந்து தொடக்கநிலை 3 முதல் 6 வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கும். தொடக்கநிலை 1, 2 மாணவர்கள் 13ஆம் தேதி புதன்கிழமையில் இருந்து பள்ளிக்குத் திரும்புவர்.


சென்ற மாதம் 27ஆம் தேதியில் இருந்து தொடக்கநிலை 1-5 மாணவர்கள் வீட்டிலிருந்தபடி கற்று வருகின்றனர்.


தொடக்கநிலை 1-5 மாணவர்களின் பெற்றோர்கள், நாளை 8ஆம் தேதி அல்லது நாளை மறுநாள் 9ஆம் தேதி தங்களின் பிள்ளைகளிடம் ‘ஏஆர்டி’ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவுகளைத் தங்களுக்கு அனுப்பப்படும் ஓர் இணைப்பின் வழியாக அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!