இன்னும் சில நாட்களில் தீபாவளி வந்துவிடும்.
நெருங்கிக்கொண்டிருக்கும் தீபத் திருநாளை முன்னிட்டு தேவையான பொருட்களை வாங்க லிட்டில் இந்தியாவில் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
ஆனால் தற்போது சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமி சமூக அளவில் மளமளவென பரவி வருகிறது.
இதைக் கருத்தில்கொண்டு தீபாவளியை முன்னிட்டு லிட்டில் இந்தியாவில் கூட்ட நெரிசலைத் தடுக்க மேம்பட்ட பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் நடைமுறைப்
படுத்தப்படும் என்று அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்து இருந்தனர்.
சிராங்கூன் சாலை-கேம்பல் லேன் சந்திப்பில் பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடம் நேற்றிலிருந்து நாளை வரை மாலை 6 மணியிலிருந்து இரவு 1 மணி வரை மூடப்படும்.
அதையடுத்து, தீபாவளிக்கு முந்திய நாள் மாலை 6 மணியிலிருந்து இரவு 2 மணி வரை அவ்விடம் மூடப்படும் என்று
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்தது.
"சுங்காய் சாலையிலும் டன்லப் ஸ்திரீட்டிலும் உள்ள சாலை கடக்கு மிடங்களுக்கு மக்கள் திருப்பி
விடப்படுவர்.
"உச்ச வேளைகளில் லிட்டில் இந்தியாவின் முக்கியப் பகுதிகளில் நெரிசல் ஏற்படாமல் தடுப்பதை இது உறுதிப்படுத்தும்," என்று கழகம் கூறியது.
அடுத்த சில நாட்களில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால் அவர்கள் வெவ்வேறு நேரங்களில் பொருள் வாங்க வசதியாக சில கடைகள் தங்கள் வர்த்தக நேரத்தை நீட்டிப்பதாகத் தெரிவித்துள்ளன.
தீபாவளி நெருங்குவதால் கூட்ட நெரிசலைத் தடுக்க சிராங்கூன் சாலை-கேம்பல் லேன் சந்திப்பில் பாதசாரிகள் சாலையைக்
கடக்கும் இடம் நேற்று
மூடப்பட்டது. படம்: தமிழ் முரசு