அதிக அபாயம் உள்ள நாடுகளிலிருந்து இந்தியா சென்ற மேலும் 4 பேருக்குத் தொற்று

கிருமித்தொற்று அபாயம் அதிகம் உள்ள நாடுகளிலிருந்து புதுடெல்லி சென்றடைந்த மேலும் நான்கு பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லியின் இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலைய அதிகாரிகள் இன்று (டிசம்பர் 2) இத்தகவலைத் தெரிவித்தனர்.

நள்ளிரவில் தரையிறங்கிய ஏர் ஃபிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்த மூவருக்கும் லண்டனிலிருந்து வந்த பயணி ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றியிருப்பது பரிசோதனைகளில் தெரியவந்தது.

அவர்களது பரிசோதனை மாதிரிகள் தேசிய நோய் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.

அவை ஓமிக்ரான் வகைக் கிருமியா இல்லையா என்பதைக் கண்டறிய மரபணுச் சோதனைகள் நடத்தப்படும்.

கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 30) இரவு, இந்தியா செல்லும் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கடுமையான விதிமுறைகள் நடப்புக்கு வந்த பின்னர் அங்கு மொத்தம் எட்டு பயணிகளுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மும்பை அதிகாரிகள் அதிக அபாயமுள்ள நாடுகளிலிருந்து அந்த நகருக்கு வந்த 76 பேரை அடையாளம் கண்டு அவர்களுக்குக் கிருமிப் பரிசோதனை செய்யவுள்ளனர்.

இந்த 76 பேரும் ஒன்றுக்கு மேற்பட்ட ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் பதிவான தென்னாப்பிரிக்கா, நைஜீரியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!