கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2ல் அமைந்திருக்கும் ஸ்ரீ சிவன் கோயிலில் கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அந்தக் கோவில் வரும் திங்கட்கிழமை பிப்ரவரி 14ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.
இந்து அறக்கட்டளை வாரியம், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 10) அன்று இது பற்றி பதிவிட்டது.
ஸ்ரீ சிவன் கோயிலை இந்து அறக்கட்டளை வாரியம் நிர்வகிக்கிறது.
கோயில் வளாகத்தில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட சிலரை அடையாளம் கண்டிருப்பதாக வாரியம் ஃபேஸ்புக்கில் கூறியது.
"பக்தர்களின் நலனையும் பாதுகாப்பையும் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்றாடச் சேவைகள் ரத்து செய்யப்படும்," என்றும் வாரியம் பதிவிட்டது.
அத்துடன், பக்தர்களின் புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் வேண்டுவதாக அது கூறியது.
மேல்விவரங்களுக்கு, பொதுமக்கள் கோயிலை 67434566 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
இந்தச் செய்தியைப் பற்றி கூடுதல் விவரம் பின்னர் அளிக்கப்படும்.