விசாக தினத்தில் பெளத்த ஆலயங்களில் நிரம்பிய மக்கள் கூட்டம்

விசாக தினமான ஞாயிற்றுக்கிழமை (மே 15) அன்று சிங்கப்பூரின் பெளத்த ஆலயங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கொவிட்-19 கட்டுப்பாடுகளால் இரண்டு ஆண்டுகளாக பௌத்த சமயத்தினர் விசான தினத்தன்று ஆலயங்களுக்குப் பெருமளவில் சென்று வழிபட முடியாத நிலை இருந்தது.

ஆனால் இன்று நிலை மாறியிருந்தது.

ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள சகாயமுனி புத்தகயா ஆலயத்தில் வழிபட பலர் காலையிலேயே வந்திருந்தனர்.

1930களில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் உள்ள 15 மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலையை மக்கள் வணங்கினர்.

"ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் விசாக தினத்தன்று இந்த ஆலயத்துக்கு வருவேன். ஆனால் கடந்த ஈராண்டுகளாக கொவிட்-19 கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்ததால் என்னால் வரமுடியவில்லை. இவ்வாண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மீண்டும் மனநிறைவுடன் வழிபாடு செய்ய முடிந்தது." என்றார் திருவாட்டி மகேஸ்வரி, 49.

அதே போல சிங்கப்பூர் சிங்கள பெத்தர் சங்கம் நடத்தி வரும் ஸ்ரீ லங்க ராமாயா பௌத்த ஆலயத்திலும் நல்ல கூட்டம்.

பக்தர்கள் புத்தரின் சிலைகளுக்கு முன் பூக்களையும் விளக்குகளையும் வைத்து வேண்டினர்.

குறிப்பாக, பல புத்த ஆலயங்களில் காணப்படும் புனித போதி மரத்தை சுற்றி இருந்த நான்கு புத்த சிலைகளுக்கு தங்கள் காணிக்கைகளை வழங்கி பக்தர் வழிபாடு செய்தனர்.

பௌத்த ஆலயங்களில் விசாக தினத்தை உணவும் வழங்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!