சிங்கப்பூர் அமைச்சரவையில் மாற்றம்
இவ்வாண்டு பிப்ரவரி மாதம், நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சராக முதல் முறையாக வரவுசெலவுத் திட்டத்தை சீராகத் தாக்கல் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த திரு லாரன்ஸ் வோங், துணைப் பிரதமராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இம்மாதம் 13ஆம் தேதியிலிருந்து அவரது புதிய பொறுப்பு நடப்புக்கு வருகிறது.
பிரதமர் லீ சியன் லூங்குக்கு அடுத்தபடியாக திரு லாரன்ஸ் வோங் பிரதமராவதை இந்த நியமனம் உறுதி செய்கிறது.
மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறைக் குழுவுக்கு அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இரண்டு மாதங்களே ஆன நிலையில் அவருக்கு அமைச்சரவையில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பிரதமர் லீ சியன் லூங் நாட்டில் இல்லாத சமயத்தில் அவர் இடைக்காலப் பிரதமராகச் செயல்படுவார்.
திரு லாரன்ஸ் வோங் தொடர்ந்து நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகிப்பார். அது மட்டுமல்லாமல் பிரதமர் அலுவலகத்தில் உத்திபூர்வ குழுவுக்கும் அவர் பொறுப்பாக இருப்பார். இதற்கு முன் இதனை துணைப் பிரதமரான ஹெங் சுவீ கியட் கவனித்து வந்தார்.
திரு ஹெங் சுவீ கியட், 61, தொடர்ந்து துணைப் பிரதமராகவும் பொருளியல் கொள்கை களுக்கான ஒருங்கிணைப்பு அைமச்சராகவும் இருப்பார் என்று நேற்றைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
எதிர்காலப் பொருளியல் மன்றம், தேசிய ஆய்வு அறநிறுவனம், உற்பத்தித் திறன் நிதி நிர்வாகக் கழகம் ஆகியவற்றை அவர் தொடர்ந்து கவனித்து வருவார்.
அமைச்சரவை மாற்றத்தை நேற்று அறிவித்த பிரதமர் லீ சியன் லூங், கடந்த ஆண்டு ஏப்ரலில் நான்காம் தலைமுறைக் குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து திரு ஹெங் விலகியதால் சிங்கப்பூர் தலைமைத்துவ மாற்றத்தின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை இடம்ெபறுவதாகத் தெரிவித்தார்.
1980களிலிருந்து சிங்கப்பூர் அமைச்சரவையில் இரண்டு துணைப் பிரதமர்கள் இருப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் 1990களில் விதிவிலக்காக குறுகிய காலத்திற்கு பிரதமர் லீ சியன் லூங் மட்டும் அப்போது துணைப் பிரதமராக இருந்தார். அதன் பிறகு 2019ஆம் ஆண்டிலிருந்து துணைப் பிரதமர் ஹெங் மட்டும் அப்பொறுப்பில் இருந்து வருகிறார்.
கடந்த 2021 மே மாதத்தில் செய்யப்பட்ட பெரிய அளவிலான அமைச்சரவை மாற்றத்தில் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன.
அந்தச் சமயத்தில் திரு வோங்நிதி அமைச்சராக நியமிக்கப் பட்டார்.
இந்த நிலையில் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் திரு வோங்கை நான்காம் தலைமுறைத் தலைவராக அவரது சகாக்கள் தேர்ந்தெடுத்து உள்ளதாகவும் அதனை அமைச்சரவை ஏற்றுக் கொண்டதாகவும் பிரதமர் லீ சியன் லூங் அறிவித்திருந்தார்.
இம்முடிவை, மக்கள் செயல் கட்சி கூட்டத்தில் கட்சியினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கீகரித்திருந்தனர்.
2011ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடு வதற்கு முன்பு மூத்த அரசாங்க ஊழியராகப் பணியாற்றிய திரு வோங், தற்காப்பு மற்றும் கல்விக்கான துணை அமைச்சரானார். 2012ல் கலாசார, சமூக, இளையர் அமைச்சுக்கு இடைக்கால அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்தார். 2014ல் அவர் முழு அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றார். 2015ல் தேசிய வளர்ச்சி அமைச்சராகவும் ஆன அவர், 2016ல் துணை நிதி அமைச்சராக கூடுதல் பொறுப்பை ஏற்றார். 2020ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்குப் பிறகு அவர் கல்வி அமைச்சரானார். பின்னர் கடந்த ஆண்டு மே மாதத்தில் அவருக்கு அமைச்சரவையில் நிதி அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
பிரதமர் லீ சியன் லூங் நேற்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் அடுத்த தலைமுறைத் தலைமைத்து வம் வடிவம் பெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
"நோய்த்தொற்றில் இருந்து சிங்கப்பூர் பாதுகாப்பாக விடுபட்டு பிரகாசமான எதிர்காலத்திற்குச் செல்ல இந்த மாற்றத்திற்கு அனை வரும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்," என்று அவர் கேட்டுக் கொண்டார்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தனது ஃபேஸ்புக் பதிவில் திரு வோங்குடன் இைணந்து பணியாற்ற உறுதி கூறியிருந்தார்.
"திரு லாரன்ஸ் வோங்குக்கு எங்களுடைய முழு ஆதரவு உண்டு. அவருடன் துணைப் பிரத மராகவும் பொருளியல் கொள்கை களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் இணைந்து பணி யாற்றி அவர் வெற்றி பெற எல்லா வித உதவிகளையும் வழங்கு ேவன்," என்று திரு ஹெங் தெரி வித்திருந்தார்.
மக்கள் செயல் கட்சி நான்காம் தலைமுறையைச் சேர்ந்த இதர அமைச்சர்களும் திரு வோங்குக்கு தங்களுடைய ஆதரவை வெளிப் படுத்தியிருந்தனர்.
கல்வி அமைச்சரான சான் சுன் சிங், "பதவி உயர்வு அதிக பொறுப்புகளையும் கொண்டுள்ளது. ஒரே குழுவாக நாங்கள் ஒருவருக் கொருவர் ஆதரவாக இருப்போம்," என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந் தார்.
நாடாளுமன்ற நாயகர் டான் சுவான்-ஜின், மாற்றத்தை ஏற்படுத் தியதற்காக திரு வோங் உட்பட அனைவருக்கும் நன்றி தெரி வித்துக்கொண்டார்.
இதற்கிடையே அனைவரது ஆதரவையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் திரு லாரன்ஸ் வோங் தமது கருத்தை நேற்று ஃபேஸ் புக்கில் வெளியிட்டிருந்தார்.
அதில், "4ஆம் தலைமுறை அமைச்சர்கள் குழுவுக்குத் தலைமை ஏற்க வேண்டும் என்று சக அமைச்சர்கள் என்னைக் கேட்டபோது வாழ்க்கையில் மிகப் பெரிய பொறுப்பை சுமக்க வேண்டி யிருக்கும் என்பது எனக்குத் தெரியும். நான் ஏற்கெனவே கூறியதுபோல என்னுடைய பலத்தின் ஒவ்வொரு துளியையும் சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரருக்கும் அர்ப்பணித்து என்னால் இயன்ற தலைசிறந்த சேவையை ஆற்று வேன்," என்று அமைச்சர் வோங் மறுவுறுதிப்படுத்தினார்.
"துணைப் பிரதமராக புதிய பொறுப்புகளில் அடியெடுத்து வைக்கும் எனக்கு உங்களுடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
"இந்தப் பயணத்தில் அனை வருடனும் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். நாம் இன்று எதிர்நோக்கும் பல்வேறு சவால் களை சிங்கப்பூர் கடந்து செல்லும் வகையில் முன்னேற்றப் பாதையை அமைப்பேன்," என்று துணைப் பிரதமராக பொறுப்பு ஏற்க விருக்கும் திரு வோங் தெரி வித்தார்.