ஜெர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா, கொவிட்-19 தொற்றால் உருவான ஆள் பற்றாக்குறையால் சிரமப்படுகிறது. அதன் காரணமாக, இந்நிறுவனம் தனது 2,200 விமானச் சேவைகளை ரத்து செய்துவிட்டது.
கோடை விடுமுைறயில் ஐரோப்பியப் பயணங்கள் ஏற்கெனவே குழப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது அந்தக் குழப்பங்களை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஐரோப்பிய நகரங்களுக்கான விமானங்களையும் ஜெர்மனிக்குள் சேவையாற்றக்கூடிய உள்ளூர் விமானச் சேவைகளையும் லுஃப்தான்சா ரத்து செய்துவிட்டதாக அதன் பேச்சாளர் புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கொவிட்-19 தொற்றின் புதிய அலையுடன் போராடி வருகின்றன.
இதற்கு முந்திய அலைகளைக் காட்டிலும் ஆபத்து குறைந்ததாக புதிய தொற்றலை இருந்தபோதிலும் வேலையிடங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை அடியோடு வீழ்ந்துவிட்டது.
இதனால், ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் கடுமையான ஊழியர் பற்றாக்குறை விமானச் சேவைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
பயணங்கள் அதிகரித்து பயண ஊழியர்கள் குறைந்ததன் காரணமாக ஐரோப்பா முழுவதும் விமான நிலையங்களில் பெருங்குழப்பம் நிலவுகிறது.
ஈராண்டுகளாக தொற்று மிகுந்திருந்த காலத்தில் ஆட்களை நீக்கிய விமான நிறுவனங்கள் தற்போது ஆள்சேர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அந்த நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கமும் விமானச் சேவையில் இன்னொரு முட்டுக்கட்டையை ஏற்படுத்தி உள்ளது.
உயர்ந்துவிட்ட வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க சம்பள உயர்வு வேண்டும் என ஊழியர்கள் கொடி பிடிக்கத் தொடங்கிவிட்டனர்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ், ரயன்ஏர் போன்ற விமான நிறுவனங்களின் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக மிரட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, லண்டன் ஹீத்ரோ விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்க உள்ளனர்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணச்சீட்டு முகப்புப் பணியாளர்கள் ஏற்கெனவே வெளிநடப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கொவிட்-19 தொற்று காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 10 விழுக்காடு சம்பள வெட்டை நீக்கவேண்டும் என்பது அந்த ஊழியர்களின் கோரிக்கை.
இதனால் 30,000 ஊழியர்களைக் கொண்ட இந்த விமான நிறுவனம் தற்போது பெரும் பிரச்சிைனயில் சிக்கித் தவிக்கிறது. பயணிகளுக்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையே, ஈஸிஜெட் விமான நிறுவனத்தின் ஸ்பெயின் விமானங்களின் ஊழியர்கள் ஜூலையில் ஒன்பது நாள் வேலைநிறுத்தம் செய்யத் திட்டமிட்டு உள்ளனர்.
ரயன்ஏர் நிறுவன ஊழியர்கள் ஆறுநாள் வேலை நிறுத்தம் அறிவித்ததைத் தொடர்ந்து இவர்களும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்து, மற்றோர் ஐரோப்பிய விமான நிறுவனமான 'கேஎல்எம்' டச்சு விமான நிறுவனத் தின் விமானிகள் இன்று சனிக்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
இதனால் தனக்கு சிறு பாதிப்பு மட்டுமே இருக்கும் என்று அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பள உயர்வு கேட்டு போராட பல்வேறு விமான நிறுவன ஊழியர்கள் திட்டம்