பிரதமர் லீ சியன் லூங் இன்னும் சற்றுநேரத்தில் தனது தேசிய தின பேரணி உரையை ஆற்றவிருக்கிறார்.
கொவிட்-19 கிருமித்தொற்று காலக்கட்டத்தின்போது, சிங்கப்பூருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், நாடு அதன் எதிர்காலம் நிலையாக இருப்பதை உறுதிசெய்வது ஆகியவற்றை பற்றி பிரதமர் பேசுவார்.
கிருமித்தொற்று காலம் தொடங்கியது முதல், பிரதமர் நேரடியாக ஆற்றும் முதல் முழுமையான தேசிய தின பேரணி உரை இதுவாகும்.
2020ஆம் ஆண்டு உரை ரத்து செய்யப்பட்டது. 2021ல் மீடியகார்ப் அரங்கிலிருந்து அவர் உரையாற்றினார்.
பிரதமரின் தேசிய தின பேரணி உரை ஆண்டின் ஆக முக்கிய உரையாகக் கருதப்படுகிறது.
பிரதமரின் உரை குறித்த விவரங்கள்:
- 6.45 மணிக்கு பிரதமர் மலாய் மொழியில் உரையைத் தொடங்குவார். அதனைத் தொடர்ந்து மாண்டரின் மொழியில் உரை நிகழ்த்துவார்.
- 8 மணிக்கு ஆங்கில உரை தொடங்கும்.
- பிரதமர் அலுவலகத்தின் பேஸ்புக், யூ டியூப் ஆகிய தளங்களில் பிரதமரின் உரை நேரடியாக ஒளியேற்றப்படும்.
- பிரதமரின் முழு தேசிய தின பேரணி உரையை இந்த இணைப்பில் காணலாம்: https://www.youtube.com/watch?v=ObScGfQuR3U
பேரணியின் ஆங்கில உரை நேரலையை இரவு 8.00 மணிக்கு இங்கு காணலாம்.