துவாஸ் துறைமுகம் நேற்று முதல் கட்டமாக மூன்று கப்பல் நிறுத்துமிடங்களுடன் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் லீ சியன் லூங், நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு துவாஸ் துறைமுகம் உந்துசக்தியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
அனைத்துலகக் கடல்துறை மையமாக சிங்கப்பூர் தொடர்ந்து திகழ துவாஸ் துறைமுகம் வகை செய்யும் என்றார் அவர்.
"சிங்கப்பூர் வழக்கம்போல் வர்த்தகங்களுக்குத் தயாராக உள்ளது என்பதை துவாஸ் துறை
முகத்தைக் கட்ட எடுக்கப்பட்ட முடிவு உலக நாடுகளுக்கு உணர்த்துகிறது. நாம் முழுவீச்
சுடன் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம்," என்று
பிரதமர் லீ கூறினார்.
இதற்கிடையே, $20 பில்லியன் செலவில் கட்டப்பட்டுள்ள துவாஸ் துறைமுகம் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று சிங்கப்பூர் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.
"புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. உலகின் வர்த்தக மையமாகத் திகழ
சிங்கப்பூருக்குப் பெரும் ஆற்றல் இருக்கிறது என்பதை துவாஸ் துறைமுகத்தால் காட்ட முடியும்," என்று ஆணையத்தின் குழுமத் தலைவர் பீட்டர் வோசர் தெரிவித்தார்.
துவாஸ் துறைமுகத்தைப் பிரதமர் லீ நேற்று நேரில் சென்று பார்த்தார்.
சிங்கப்பூரின் மேற்குப் பகுதிகளில் உள்ள பல தொழிற்பேட்டைகளுக்கு மிக அருகில் துவாஸ் துறைமுகம் இருப்பது அதற்குச் சாதகமான ஒன்று எனத் திரு லீ கூறினார்.
ஜூரோங் தொழில்துறை வட்டாரம், ஜூரோங் ஏரி வட்டாரம், துவாஸ் தொழில்துறை வட்டாரம் உள்ளிட்ட பல தொழிற்பேட்டைகள் துவாஸ் துறைமுகத்துக்கு மிக அருகாமையில் உள்ளன.
"துறைமுகத்துக்குப் பக்கத்தில் இருப்பதால் துறைமுகச் சேவைகளை விரைவாகவும் குறைந்த விலையிலும் பெற முடியும். இதன் விளைவாக உற்பத்தி துரிதமடையும். உற்பத்தி செய்யப்படும் பொருள்களை அனைத்துலகச் சந்தைகளுக்கு விரைவாக ஏற்றுமதி செய்யலாம்," என்றார் பிரதமர் லீ.
எதிர்காலத்தில் சவால்மிக்க செயல்பாடு களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு தன்னால் சமாளிக்க முடியும் என்பதை அனைத்துலகப் பங்காளிகளுக்கும் கப்பல்துறை நிறுவனங்களுக்கும் துவாஸ் துறைமுகம் உறுதி அளிக்கும் என்றார் அவர்.
அதுமட்டுமல்லாது, ஊழியர்களுக்கு அது கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கிஉள்ளதையும் திரு லீ சுட்டினார்.
கொள்கலன்களை பாரந்தூக்கிகள் இறக்கிவைத்ததும் அவற்றைத் தானியங்க வாகனங்கள் ஏற்றிச் செல்கின்றன.
துவாஸ் துறைமுகம் நான்கு கட்டங்
களாகத் திறக்கப்படும்.
கெப்பல், பிரானி, பாசிர் பாஞ்சாங், தஞ்சோங் பகார் ஆகிய துறைமுகங்களில் ஆற்றப்படும் பணிகள் 2040ஆம் ஆண்டு அளவில் துவாஸ் துறைமுகத்தில் ஒருங்கிணைக்கப்படும்.
கையாளும் கொள்ளளவு அடிப்படையில் சிங்கப்பூர் துறைமுகங்கள் தற்போது கொண்டுள்ள ஆற்றலைவிட துவாஸ் துறைமுகம் மூன்றில் ஒரு பகுதி அதிகம் கொண்டிருக்கும்.
துவாஸ் துறைமுகம் நேற்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டாலும் அதில் உள்ள இரண்டு கப்பல் நிறுத்துமிடங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டன.
விநியோகச் சங்கிலி நெருக்கடி ஏற்பட்டபோது அதைச் சமாளிக்க அவை திறக்கப்பட்டன. இந்த ஆண்டு இறுதிக்குள் துவாஸ் துறைமுகத்தில் ஐந்து கப்பல் நிறுத்து
மிடங்கள் செயல்படும்.
அடுத்த இருபது ஆண்டுகளில் கடல்துறையில் ஆயிரக்கணக்கான வேலைகளை துவாஸ் துறைமுகம் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.