புத்தாக்கத்தில் சிங்கப்பூருக்கு ஏழாவது இடம்

உலகில் புத்தாக்கத்தைப் பொறுத்தவரை சிங்கப்பூர் இப்போது ஏழாவது ஆகப்பெரிய பொருளியலாக இருக்கிறது. சென்ற ஆண்டில் சிங்கப்பூர் எட்டாவது இடத்தில் இருந்தது.

உலக அறிவுசார் சொத்து நிறுவனம் என்ற அமைப்பும் ‘பார்சுலாண்ஸ் இன்ஸ்ட்டியுட்’ என்ற லாபநோக்கற்ற ஆய்வு அமைப்பும் உலக புத்தாக்க அட்டவணை 2022 என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டன.

அந்த அறிக்கை, சிங்கப்பூரை ஏழாவது ஆக அதிக புத்தாக்கப் பொருளியல் என்று வரிசைப்படுத்தி இருக்கிறது.

புத்தாக்கத்தில் வெற்றி பெறக்கூடிய ஆற்றல் ஒரு நாட்டிடம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு ஏற்ப, 132 நாடுகளை அந்த அறிக்கை ஆராய்ந்து வரிசைப்படுத்தியது.

சுவிட்சர்லாந்துதான் உலகிலேயே புத்தாக்கத்தில் முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்கா, சுவீடன், பிரிட்டன், நெதர்லாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

அரசியல், செயல்முறை நிலைப்பாடு, வலுவான விதிமுறைகளை உருவாக்கி அமல்படுத்தும் ஆற்றல் ஆகியவை உள்ளிட்ட பெரும்பாலானவற்றில் சிங்கப்பூர் முதல்இடத்தில் உள்ளது.

அதிக தொழில்நுட்ப இறக்குமதிகள், அறிவியல், பொறியியல் துறைகளில் பட்டதாரிகளின் விகிதாச்சாரம் போன்றவற்றிலும் உயரிய இடத்தில் சிங்கப்பூர் உள்ளது.

இருந்தாலும் புத்தாக்க நடவடிக்கைகளால் உருவாகும் பலாபலன்களைப் பார்க்கையில் சிங்கப்பூர் ஓரிடம் இறங்கி 14வது இடத்தில் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!