நோம்பென்: கம்போடியாவின் முந்திரி விவசாயத்தை அறிந்துகொள்ள 4 நாள் ஆய்வுச் சுற்றுலா நடைபெற்றது.
அந்நாட்டின் விவசாய அமைச்சு, வனத்துறை அமைச்சு, மீன்வள அமைச்சு ஆகியன வர்த்தக அமைச்சுடன் இணைந்து அந்த ஏற்பாட்டை செய்திருந்தன. நோம் பென், கம்போங் தொம், கிராத்தி, ஸ்டங் டிரெங் மாவட்டங்களில் அந்த சுற்றுலா நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் அச்சுற்றுலா நவம்பர் 29 முதல் டிசம்பர் 2 வரை நடைபெறுகிறது.
திறப்புவிழாவில் பேசிய விவசாய அமைச்சின் பேச்சாளர் திரு இம் ரச்னா, 50 பங்கேற்பாளர்கள் சுற்றுலாவில் கலந்துகொண்டுள்ளனர் என்று கூறினார்.
அவர்களில் விவசாய, வர்த்தக அமைச்சுகளின் பிரதிநிதிகள், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், ஜெர்மனியின் அனைத்துலக மேம்பாட்டு முகவையான ஜிஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள், 30 ஊடகத்தினர் ஆகியோர் அடங்குவர் என்றார் திரு இம் ரச்னா.
பத்திரிகையாளர்கள் 40 பேர் கலந்துகொண்ட சுற்றுலாவில் விதைப்பதிலிருந்து அறுவடையாகி சந்தைகளில் முந்திரிகள் விற்பனைக்குத் தயாராகும் வரையிலான படிநிலைகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் கூறினார்.