பழிவாங்கும் நோக்கில் 1,100 கோழிகளைக் கொன்ற ஆடவர்

சீனாவில் 1,100 கோழிகளைப் பயப்பட வைத்துக் கொன்ற ஆடவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பழிவாங்கும் நோக்கில் ஆடவர் அந்தக் குற்றத்தைச் செய்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன. 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஹூனான் மாவட்டத்தில் ஜாங் என்னும் ஆடவர், கூ என்பவரின் மரங்களை முன்னறிவிப்பின்றி வெட்டினார்.

அதனால் ஆத்திரமடைந்த கூ, ஜாங்கைப் பழிவாங்க அவரின் கோழிப் பண்ணைக்குள் அடிக்கடி சென்று, கோழிகளைப் பயப்படவைத்துக் கொன்றுள்ளார்.

இரவு நேரங்களில் கோழிகள் மீது வெளிச்சம்பாய்ச்சி அவற்றை பதற்றமடையச் செய்து ஒன்றன்மீது ஒன்று மிதிபட வைத்து, 460 கோழிகளைக் கொன்றார் கூ.

ஜாங் அதனைக் கண்டுபிடிக்க, கூ அவருக்கு 581 வெள்ளி இழப்பீடு கொடுத்தார்.

கோபம் தணியாத கூ மீண்டும் அதே பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி, மேலும் 640 கோழிகளைக் கொன்றார். 

அதன்பிறகு கூமீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டது.

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!