சீனாவில் 1,100 கோழிகளைப் பயப்பட வைத்துக் கொன்ற ஆடவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பழிவாங்கும் நோக்கில் ஆடவர் அந்தக் குற்றத்தைச் செய்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஹூனான் மாவட்டத்தில் ஜாங் என்னும் ஆடவர், கூ என்பவரின் மரங்களை முன்னறிவிப்பின்றி வெட்டினார்.
அதனால் ஆத்திரமடைந்த கூ, ஜாங்கைப் பழிவாங்க அவரின் கோழிப் பண்ணைக்குள் அடிக்கடி சென்று, கோழிகளைப் பயப்படவைத்துக் கொன்றுள்ளார்.
இரவு நேரங்களில் கோழிகள் மீது வெளிச்சம்பாய்ச்சி அவற்றை பதற்றமடையச் செய்து ஒன்றன்மீது ஒன்று மிதிபட வைத்து, 460 கோழிகளைக் கொன்றார் கூ.
ஜாங் அதனைக் கண்டுபிடிக்க, கூ அவருக்கு 581 வெள்ளி இழப்பீடு கொடுத்தார்.
கோபம் தணியாத கூ மீண்டும் அதே பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி, மேலும் 640 கோழிகளைக் கொன்றார்.
அதன்பிறகு கூமீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டது.