அரசியல் சாசனத்திற்கு 61.35% ஆதரவு

பேங்காக்: தாய்லாந்தில் ராணுவம் முன்மொழிந்த புதிய அரசியல் சாசனத்திற்கு 61.35 விழுக் காட்டினர் ஆதரவு தெரிவித் துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அந்த சாசனம் குறித்து மக்களின் கருத்தை அறிய அங்கு ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் அதிகாரபூர்வ முடிவுகளை ஆணையம் நேற்று அறிவித்தது. மக்களின் இந்த ஆதரவு தாய்லாந்து பிரதமர் சான்=ஓசா விற்கு கிடைத்த பெரும் வெற்றி என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். புதிய சாசனத்திற்கு 38.65 விழுக்காட்டினர் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். புதிய சாசனத்திற்கு ஆதர வாக மக்கள் வாக்களித்தால் அங்கு தேர்தல் நடக்க வாய்ப் பில்லை என்று பல அரசியல் கட்சிகள் முன்னதாகக் கூறியிருந் தன. இந்நிலையில் தேர்தல் முன்பு அறிவித்தபடி அடுத்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என்று பிரதமர் உறுதியளித் துள்ளார். நிலையான அரசாங்கம் அமைய புதிய சாசனம் வழிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!