கோலாலம்பூர்: வடகொரியாவின் கிம் ஜோங் நாமின் உடல் பதப் படுத்தி வைக்கப்பட்டு உள்ள தாக நேற்று மலேசிய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் நேற்று பேசிய திரு அஹமட் சாஹிட் ஹமிடி, "கோலாலம்பூர் மருத்து வமனையில் வைக்கப்பட்டிருந்த கிம் ஜோங் நாமின் உடல் நடை முறைகளை பூர்த்தி செய்வதற் காக வெளியே கொண்டு வரப் பட்டது," என்றார். "ஆமாம் அது உண்மைதான். உடலைப் பதப்படுத்துவதற்கான முயற்சி அது. பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல் அழுகக்கூடும் என்பதால் பாது காக்கும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது," என்று அவர் குறிப்பிட்டார்.
மலேசிய துணைப் பிரதமர் அஹமட் சாகிட் ஹமிடி