தெருவில் சைக்கிள் மீது விரைந்து வந்த குரங்கு, ஓரத்தில் அமர்ந்திருந்த குழந்தையைத் திடீரென இழுத்துச் சென்றதைக் காட்டும் காணொளி டுவிட்டரில் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயத்தில் கூச்சலிட்ட அந்தக் குழந்தையை குரங்கு தரதரவென இழுத்ததைக் காட்டும் இந்தக் காணொளி இந்தோனீசியாவில் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. வழிப்போக்கர் ஒருவர் குழந்தையைக் காப்பாற்ற முற்பட்டபோது குரங்கு அந்தக் குழந்தையைவிட்டு ஓடிச் சென்றது.
இந்தக் குரங்கு வனத்தைச் சேர்ந்தது அல்ல என்றும் மனிதர்களால் வளர்க்கப்பட்டது என்றும் இணையவாசிகள் சிலர் ஊகிக்கின்றனர்.