பெய்ஜிங்: சீனா இவ்வாரத்தில் இரண்டாவது முறையாக அமெரிக்காவுடன் பொருளியல் பேச்சை நடத்தியுள்ளது.
சீன துணைப் பிரதமர் லியு ஹியும் அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெலனும் பரஸ்பர அக்கறைக்குரிய விவகாரங்கள் பற்றி பேசினர்.
மெய்நிகர் காட்சி வழியாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இரு நாடுகளைச் ேசர்ந்த உயர்மட்ட பொருளியல், வர்த்தக அதிகாரிகள் பங்கேற்றனர்.
முன்னைய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நேரடியாக சீனாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டார்.
அதன் பிறகு இப்போதுதான் இரு தரப்பினரும் சந்தித்துப் பேசிஉள்ளனர்.
அமெரிக்க-சீன வர்த்தகப் பேச்சில் திரு லியு தலைமையிலான சீனாவின் குழு பங்கேற்றுள்ளது.
கடந்த மே 26ஆம் தேதி அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேத்தரின் டாயுடன் இதே போன்ற வர்த்த கப் பேச்சு நடைபெற்றது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சீனாவை அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து குறைகூறி வருகிறது. சீனாவுக்கு எதிராக இதர நாடுகளை அமெரிக்கா ஒன்று சேர்த்துள்ளது.
இருப்பினும் அமெரிக்காவுடனான பொருளியல் பேச்சை சீனா தீவிரமாக்கியுள்ளது.
"வலுவான பொருளியல் மீட்சி மற்றும் அெமரிக்காவின் நலன்களுக்கு உகந்த துறைகளில் ஒத்துழைப்புக்கு ஆதரவளிக்கும் பைடன்-ஹாரிஸ் திட்டத்தைப் பற்றி சீன பேராளர்களுடன் நிதியமைச்சர் யெலன் பேசினர். அதே சமயத்தில் கவலைக்குரிய விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டது," என்று அமெரிக்க நிதியமைச்சு அறிக்கை தெரிவித்தது.
டாக்டர் யெலனுடன் திரு லியு மேற்கொண்ட காணொளிப் ேபச்சில் பொருளியல் நிலவரம், இருதரப்பு-பலதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் விரிவாகப் பேசினர் என்று சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ஸின்ஹுவா கூறியது.
சீன-அமெரிக்க பொருளியல் உறவு மிகவும் முக்கியம் என்பதை இரு தரப்பினரும் நம்புவதாகவும் அது மேலும் சொன்னது.