பேங்காக்: தாய்லாந்தில் சினோவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுமார் 600க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அவர்களுக்குக் கூடுதல் தடுப்பூசி போடுவது குறித்தும் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
சினோவேக் தடுப்பூசி போட்டுக்கொண்ட 677,348 சுகாதார ஊழியர்களில் 618 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக ஏப்ரல் முதல் ஜூலை வரை
யிலான சுகாதார அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன.
அவர்களில் தாதி ஒருவர் மாண்டுவிட்டார்; இன்னொரு
வரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.
கூடுதல் தடுப்பூசி போட நிபுணர் குழு பரிந்துரைத்துள்ள நிலையில், "அது வேறு தயாரிப்பு தடுப்பூசியாக இருக் கும். அதாவது அது ஆஸ்ட்ரா ஸெனகா அல்லது ஒரு எம்ஆர்என்ஏ தடுப்பூசியாக இருக்கக்கூடும்," என்றார் சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஒருவர்.
நேற்று அங்கு 9,418 தொற்று சம்பவங்களும் 91 மரணங்களும் பதிவாகின. இவை இரண்டுமே தாய்லாந்தில் பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும்.
இந்தோனீசியாவிலும் சினோவேக் தடுப்பூசிகள் அதிகளவில் போடப்படுகின்றன. எனவே தனது சுகாதார ஊழியர்களுக்கு வேறு தயாரிப்பு தடுப்பூசி கூடுதலாக போடப்படும் என்று அந்நாடு கூறியது.