கோலாலம்பூர்: பினாங்கு மாநிலத்திலுள்ள புக்கிட் மெர்தாஜாம் பகுதியில் நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவை மீறி கூட்டுத்தொழுகையில் ஈடுபட்ட 49 பேரை போலிசார் கைது செய்தனர்.
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் சென்றவர்களுக்கு நடமாட்ட கட்டுப்பாடு காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் பள்ளிவாசலுக்கு வெளியே அமர்ந்து கூட்டாக தொழுகையில் ஈடுபட்டனர்.
ஜூரு பகுதியில், தாமான் பெலாங்கி வட்டாரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு வெளியே இந்தத் தொழுகை நடந்தது.
நடமாட்ட கட்டுப்பாடு காரணமாக பள்ளிவாசலில் 100 பேர் மட்டுமே தொழுகைக்கு அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட 48 பங்ளாதேஷ் நாட்டவர்கள் நான்கு நாட்கள் தடுப்புக்காவலிலும் ஒரு உள்ளூர்காரர் மூன்று நாள் தடுப்புக்காவலிலும் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் விசாரணைதொடர்ந்து நடத்தப்படுவதாக பினாங்கு காவல்துறை தலைவர் முகமட் ஷூஹாய்லி முகமட் ஜைன் தெரிவித்தார்.