பேங்காக்: அடுத்த மாதம் கூடுதல் சுற்றுலாத் தலங்களைத் திறக்க தாய்லாந்து திட்டமிட்டுள்ளது.
சுற்றுப்பயணிகளிடையே பிரபலமாக இருக்கும் இடங்கள் திறக்கப்படும் என்று தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
தாய்லாந்தில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சுற்றுப்பயணிகளை ஈர்க்க முடியும் என்று அது நம்பிக்கை தெரிவித்தது. இதன்மூலம் கொவிட்-19 நெருக்கடிநிலையால் நிலைகுலைந்துள்ள பொருளியலை மீண்டும் உயிர்ப்பிக்க தாய்லாந்து விரும்புகிறது.
தலைநகர் பேங்காங், சியாங் மாய் ஆகிய இடங்களுடன் கடற்கரை சுற்றுலாத் தளங்களான பட்டாயா, சா-அம், ஹுவா ஹின் ஆகியவையும் அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாத நடுப்பகுதிக்குள் சியாங் ராய், கோ சாங், கோ கூட் போன்ற இடங்களும் சுற்றுப்பயணிகளுக்கு முழுமையாகத் திறந்து விடப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு அண்டை நாடுகளுடன் சிறப்பு பயண ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தாய்லாந்தின் பயணத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.