ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு புதன்கிழமை (அக்டோபர் 6) நூற்றுக்கணக்கானோர் படையெடுத்தனர்.
இந்த வாரம் பாஸ்போர்ட் அலுவலகம் திறக்கப்படுவதாக செய்தி வெளியானதையடுத்து மக்கள் அங்கு பெருந்திரளாகக் கூடினர்.
நெரிசலைக் கட்டுப்படுத்த தலிபான் படையினர் சிலரை அடித்து விரட்ட நேரிட்டது. சனிக்கிழமையிலிருந்து பாஸ்போர்ட் சேவை தொடரும் என்று தலிபான் கூறியிருந்தது.
ஆகஸ்ட் மாதம் முந்தைய அரசாங்கம் வீழ்ந்ததைத் தொடர்ந்து பாஸ்போர்ட் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.