ஹாங்காங்: ஹாங்காங்கில் கொவிட்-19 மரணங்கள் அதிகரித்து வருவதால் சவக்கிடங்குகள் நிரம்பி வழிகின்றன.
இதனால் நடமாடும் குளிர் சாதனப் பெட்டிகள் ஏற்பாடு செய்யப் பட்டு உடல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களாக ஹாங் காங்கில் தொற்றுச் சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றன. ஏறக்குறைய தொற்று தொடங்கிய ஆரம்பகால நெருக் கடியை ஹாங்காங் காட்சிகள் நினைவூட்டுகின்றன.
ஃபூ ஷான் பொது சவக் கிடங்குக்கு அருகில் நான்கு நடமாடும் குளிர்சாதனப் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை புகைப்படங்கள் மூலம் காண முடி கிறது. அதன் அருகில் காலியான சவப்பெட்டிகளும் ஐஸ் மூட்டைகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அண்மைய கிருமிப் பரவலால் ஹாங்காங்கின் சுகாதாரத் துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. கொவிட்-19 மரண விகிதம் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. தடுப்பூசி போடாதவர்களிடையே மரணம் அதி கரித்துள்ளது. உடல் ஊனமுற்றோர் நிலையங்கள் உட்பட 750க்கும் மேற்பட்ட பராமரிப்பு நிலையங்களில் தொற்று பரவியிருப்பதால் அர சாங்கம் கவலை அடைந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் குளி ரூட்டப்பட்ட கொள்கலன்கள் உட்பட 300 சடலங்களை வைப்பதற்கான இடங்கள் உருவாக்கப்பட்டு வரு கின்றன. ஃபூ ஷான் சவக்கிடங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் ஒரு பிரிவு ஏப்ரலில் தயாராகும்போது ேமலும் 800 சடலங்கள் பாதுகாப் பதற்கான இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.