ஹாங்காங்: உலகிலேயே ஆக அதிக கொவிட்-19 உயிரிழப்பு விகிதம் கொண்ட நாடாக உள்ளது ஹாங்காங்.
அங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மூத்தோரிடைய உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், அங்கு தாதிமை இல்லங்களில் கிருமிப் பரவல் மேலும் அதிகரித்து வருவதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மாண்டோர் எண்ணிக்கை கடைசி ஏழு நாளில் சராசரியாக ஒரு மில்லியன் மக்களுக்கு 27 பேராக உயர்ந்தது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகளின் அடிப்படையில் ப்ளூம்பெர்க் கணக்கீடு இதைக் கூறுகிறது.
இது அமெரிக்காவுக்கு அடுத்து உலகிலேயே இரண்டாவது ஆக அதிக உயிரிழப்பு பதிவான லாட்வியாவைவிட இரட்டிப்பாகும்.
இதற்கிடையே, வீட்டிலேயே தொற்றுப் பரிசோதனை செய்து கொள்ளும் திட்டத்தின்கீழ், கிட்டத்தட்ட 17,000 பேர் தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. இதுதவிர சுகாதார அதிகாரிகள் நேற்று மேலும் 28,745 புதிய தொற்றுச் சம்பவங்களை உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், நாடு தழுவிய தொற்று பரிசோதனை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.
உலகளவில் கிருமித்தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை ஆறு மில்லியனைக் கடந்துவிட்டது.