பருவநிலை மாற்றப் போராட்டம்: உணவுத் துறைக்கு நிதி ஒதுக்கீடு

துபாய்: வறட்சியை எதிர்கொள்ளும் ஆற்றலுடைய பயிர்களை உருவாக்குவது, குறைந்த அளவிலான மீத்தேன் வாயுவை வெளியேற்றும் மாடுகளை வளர்ப்பது ஆகியவை பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் சில.

இவற்றுடன், வனப் பகுதிகளை அழிக்காத வண்ணம் மாடுகளைக் கண்காணிப்பதும் இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்டவை யாவும் உலகுக்கு தேவையான அளவு உணவு கிடைப்பதை உறுதிசெய்யும் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போரில் கைகொள்ளப்படும் ஆயுதங்கள் என்றும் கூறப்படுகிறது. அதனால் அவற்றுக்குப் பெரிய அளவில் பண வழங்கீடு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் உணவு, வேளாண் துறைகளுக்கு அமெரிக்க டாலர் 3 பில்லியனுக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக காப் 28 பருவநிலை மாற்ற உச்ச நிலை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இதற்குமேல் அரசாங்கங்கள், நன்கொடையாளர்கள், தனியார் நிதி ஆகியவை வேளாண் துறையில் மீத்தேன் வாயுவைக் கட்டுப்படுத்த, காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க, பருவநிலைக்கு ஏற்புடைய புத்தாக்க திட்டங்கள் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கி வருகின்றன.

உலக நாடுகளின் உணவுப் பிரச்சினைக்கு இந்தப் பருவநிலை மாநாடு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

உலக மக்கள்தொகை அதிகரித்துவரும் நிலையில், பசுமை இலக்குகளை பாதிக்கும் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதும் அதைச் சமாளிப்பதும் மாநாட்டின் முக்கிய குறிக்கோள்களாக விளங்குகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!