வாஷிங்டன்: அமெரிக்காவின் பென்ஸ்சில்வேனியா மாநிலத்தில் வீடு ஒன்று தீக்கு இரையானது.
அந்த வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பிப்ரவரி 9ஆம் தேதியன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிப்ரவரி 7ஆம் தேதியன்று இரண்டு காவல்துறை அதிகாரிகளைத் துப்பாக்கியால் சுட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரும் மாண்டோரில் ஒருவர் என்று அறியப்படுகிறது.
மூன்று பெரியவர்கள், மூன்று சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிப்ரவரி 7ஆம் தேதியன்று ஈஸ்ட் லேன்ஸ்டவுனில் உள்ள வீட்டில் 11 வயது சிறுமி துப்பாக்கியால் சுடப்பட்டதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த இடத்தை அதிகாரிகள் அடைந்தபோது அவர்களை நோக்கி யாரோ துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.
சிறிது நேரம் கழித்து, அந்த வீட்டில் தீ மூண்டது.
பிப்ரவரி 9ஆம் தேதி நிலவரப்படி, மாண்டோரின் பெயர்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.