சோல்: தென்கொரியாவில் கட்டாய ராணுவச் சேவையைத் தவிர்க்க தமது உடல் எடையை பட்டினி கிடந்து குறைத்த 22 வயது ஆடவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆடவரின் தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆடவர் ராணுவச் சேவை சட்டத்தை மீறியதற்காக அந்த தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ராணுவச் சேவை சட்டத்தின்படி தென்கொரியாவில் நல்ல உடல் தகுதியுடன் உள்ள ஆண்கள் குறைந்தது 18 மாதங்களாவது அந்நாட்டு ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.
உடல்நலக் குறைவு உள்ளவர்களுக்கு கடினமான பயிற்சிகள் தவிர்க்கப்பட்டு வேறு பணிகள் தரப்படுவது வழக்கம்.
தண்டனை விதிக்கப்பட்ட நபர் 2021ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கு இடையில் நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளில் உடல் எடையைக் குறைத்துள்ளார்.
2021 ஜனவரி மாதம் ஆடவர் 54 கிலோகிராம் எடை இருந்தார். அதன் பின்னர் 2022 பிப்ரவரி மாதம் 50.4 கிலோ இருந்தார்.
அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் ஆடவர் வேண்டும் என்றே உடல் எடையைக் குறைக்க நீர் உணவுகளை மட்டும் எடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.
உடல் எடை குறைந்தால் கடினமான ராணுவச் சேவை இருக்காது என்று தெரிந்தே அந்த ஆடவர் இச்செயலில் ஈடுபட்டதாக நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது.
இருப்பினும் ஆடவர் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.