பெங்களூரு: கைப்பேசி மற்றும் பல மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களைக் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா உள்ளிட்ட 92 நாடுகளில் உள்ள அதன் வாடிக்கையாளர்கள் உளவு மென்பொருள் ஒன்றால் பாதிக்கப்படக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
உளவு மென்பொருள் மூலம் வாடிக்கையாளரின் கைப்பேசியை மோசடிக்காரர்களால் உலகின் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் எளிதில் ஊடுறுவி கையாளமுடியும் என்று ஆப்பிள் தெரிவித்தது.
இருப்பினும் இதுபோன்ற உளவு மென்பொருள் தாக்குதல் சம்பவங்கள் நடப்பது அரிதான ஒன்று.
2021ஆம் ஆண்டு முதல் தமது வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்கும்படி ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பி வருகிறது.