சித்திரைப் புத்தாண்டு: ஏராளமான கைதிகளுக்கு இலங்கை பொது மன்னிப்பு

கொழும்பு: சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க 779 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

புத்தாண்டுக்கு முன்தினமான சனிக்கிழமை (ஏப்ரல் 13) அவர் அந்த உத்தரவை வெளியிட்டதாக அதிபர் அலுவலகம் கூறியது.

அந்த உத்தரவைத் தொடர்ந்து 779 சிறைக் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படுகிறார்கள்.

சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக இலங்கை அரசாங்கம் நீண்ட பொது விடுமுறையை அறிவித்து உள்ளது.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) வரையிலான விடுமுறைக் காலத்தில் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கெனவே, கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது இலங்கையில் ஏறக்குறைய 1,000 சிறைக் கைதிகள் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டனர்.

அவ்வப்போது பெரிய எண்ணிக்கையிலான கைதிகள் விடுதலை செய்யப்படுவதன் மூலம் இலங்கை சிறைச்சாலைகளில் நெரிசல் குறையும் என்று சிறை அதிகாரி ஒருவர் கூறியதாக ஏஎஃப்பி செய்தி தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) நிலவரப்படி, 30,000 கைதிகள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அந்தச் சிறைகளில் ஏறக்குறைய 11,000 கைதிகளை அடைப்பதற்கான இடவசதியே உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!