உல‌க‌ம்

ஹாங்காங்: அணுவாயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பான முடிவுகள் யாவையும் மனிதர்களே எடுக்க வேண்டும் என்றும் ஒருபொழுதும் செயற்கை நுண்ணறிவிடம் அம்முடிவை விடவேண்டாம் என்றும் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் மூத்த அமெரிக்க அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
மணிலா: சுட்டெரிக்கும் வெப்பத்தில் நாடே புழுங்கிவரும் வேளையில், பிலிப்பீன்ஸ் நாட்டின் சில நகரங்களில் மே 2, 3 ஆகிய தேதிகளில் பொதுப் பள்ளிகள் தொடர்ந்து நேரடி வகுப்புகளை நிறுத்திவைத்திருக்கும்.
லண்டன்: லண்டனில் நடந்த வாள்வீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த 14 வயது சிறுவனின் விவரங்களை வெளியிட்ட பிரிட்டிஷ் காவல்துறையினர், சந்தேக நபர் மீது கொலைக் குற்றச்சாட்டுடன் மற்ற குற்றச்சாட்டுகளும் சாட்டப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
டெல் அவிவ்: காஸாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் ராஃபா நகரினுள் முன்பே கூறியதைப் போல் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உறுதியளித்துள்ளார்.
மாஸ்கோ: உக்ரேனுக்கு எதிராகப் போரிட்டு வரும் தனது ராணுவத்துக்குக் கூடுதல் ஆயுதங்களை அனுப்பிவைக்க ரஷ்யா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கூடுதல் ஆயுதங்களை உற்பத்தி செய்து விரைவாக அனுப்பிவைக்கும்படி ரஷ்ய ஆயுத ஆலைகளுக்கு அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சர் செர்கே ஷொய்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.