உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்

சிங்கப்பூர் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு மற்றும் தேசிய நூலகத்தின் ஆதரவுடன் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டி இம்மாதம் 11ஆம் தேதி தேசிய நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தப் போட்டியில் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 130 மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களது பெற்றோர் பலரும் இதில் பங்கேற்றனர்.

மொழிபெயர்ப்புக்காக சிங்கப்பூரின் வரலாற்று ரீதியான பனுவல் தரப்பட்டது.

முதல் பிரிவில் உயர்நிலை 1, 2 மாணவர்களும் இரண்டாம் பிரிவில் உயர்நிலை 3, 4, 5 மாணவர்களும் பங்குபெற்றனர்.

ஒவ்வொரு பிரிவுக்கும் முதல் மூன்று பரிசுகளுடன் ஐந்து ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. அதோடு, சிராங்கூன் டைம்ஸ் மாத இதழுக்கான ஆண்டுச் சந்தாவும் வழங்கப்பட்டது.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 18) நடைபெற்ற பொங்கல் சிறப்புப் பட்டிமன்ற நிகழ்ச்சியின்போது இப்பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு மனோகரன் சுப்பையா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

“இன்றைய இளையர்களிடம் பெரிதும் வலியுறுத்த வேண்டியது படிப்பா? பண்பாடா?” என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு நகைச்சுவை நாவரசர் புலவர் மா.இராமலிங்கம் நடுவராக செயல்பட்டார்.

'படிப்பே' என்ற அணியில் திரு சரீஃப், கார்த்திகேயன், பார்கவி ஆகியோரும் 'பண்பாடே' என்ற அணியில் முனைவர் ராஜிஸ்ரீநிவாசன், சுசூகி தர்மராஜ், விஷ்ணுவர்தினி ஆகியோரும் பேசினர். செய்தி: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!