காபூல் பள்ளிவாசலில் தாக்குதல்: பலர் பலி; ஏராளமானோர் காயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் உள்ள ‌ஷியா முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஒன்றில் நேற்று குண்டு வெடித் ததில் குறைந்தது 27 பேர் உயிர் இழந்ததாகவும் சுமார் 35 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரி கள் கூறினர். தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி அந்த பள்ளிவாசலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக உள்துறை அமைச்சு அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப் பேற்கவில்லை. அத்தாக்குதலின்போது அந்த பள்ளிவாசலுக்குள் இருந்த ஒருவர் அதுபற்றிக் கூறினார். அந்த பள்ளிவாசலில் பலர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று பெரும் சத்தம் கேட்டது. சன்னல் கண்ணாடிகள் உடைந்தன. அங்கு என்ன நடக்கிறது என்பதை தன்னால் யூகிக்க முடியவில்லை என்றும் கூக்குரல் எழுப்பியபடி அங்கிருந்து வெளியில் ஓடி வந்ததாகவும் அவர் சொன்னார்.

காபூலில் குண்டு வெடித்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் கூடியுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!