ப. பாலசுப்பிரமணியம்
பொத்தோங் பாசிர் வீடமைப்புப் பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ சிவ துர்க்கா ஆலயத்தின் மாபெ ரும் குடமுழுக்கு விழா அடுத்த மாதம் 4ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 8.50 முதல் 9.50 மணி வரை நடைபெறும். ஆலயத்தின் புதுப்பிப்புப் பணி கள் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கின என்றும் பல புதிய அம்சங்களுடன் புதிய ஆலயம் சிறப்பாக உருவாக்கப்பட்டு உள்ளது என்றும் நேற்று நடை பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஸ்ரீ சிவ துர்க்கா ஆலய நிர்வாகக் குழுத்தலைவர் திரு கே. ராமசந்திரா, 67, கூறினார். $8.3 மில்லியன் செலவிலான இந்தப் புதுப்பிப்புப் பணிகள் இரண்டு கட்டங்களாகச் செயல் படுத்தப்படும். முதற்கட்டப் பணி கள் பிரதான கோயில் சம்பந்தப்பட் டவை. இரண்டாம் கட்டப் பணிகள் ஆலய வளாகத்தில் அமையவுள்ள நான்கு மாடி இணைப்புக் கட்டடம் தொடர்பானவை.
புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் வண்ண சிற்பங்கள் ஆலயத்தின் உட்புறத்துக்கு மேலும் அழகு சேர்த்துள்ளன. படம்: திமத்தி டேவிட்