ஹவ்காங் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றின் உச்சியிலிருந்து 'பிளாஸ் டர்' எனப்படும் காரைப் பூச்சு 12 மாடிகள் கீழே விழுந்தது. ஞாயிற் றுக்கிழமை காலை நிகழ்ந்த இச் சம்பவத்தில் யாரும் காயமடைய வில்லை. ஆனால், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில வாகனங்கள்மீது காரைப் பூச்சு துகள்கள் காணப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை திடீரென பலத்த சத்தம் கேட்டதாகச் சொன் னார் 39 வயது குடியிருப்பாளர் அண்டி லோ. "நான் கீழே சென்று பார்த்தபோது காரைப் பூச்சு தரை எங்கும் சிதறிக் கிடந்தது," என்று அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். கீழே விழுந்த காரைப் பூச்சு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது விழுந்திருக்கக்கூடும் என்றும் லாரியின் கூரை நசுங்கிப் போயிருந்ததாகவும் திரு லோ தெரிவித்தார். அவர் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் வசிக்கிறார்.
குடியிருப்புக் கட்டடத்தின் உச்சியிலிருந்து விழுந்த அந்தக் காரைப் பூச்சு (இடது படம்), கீழே நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது (வலது படம்) விழுந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. படம்: ஸ்டோம்ப்