மாடியில் இருந்து மாணவியைத் தள்ளிவிட்ட ஆசிரியர்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பள்ளியில் வகுப்பறையைச் சுத்தம் செய்யாத காரணத்திற்காக ஒரு மாணவியை, ஆசிரியர்கள் பள்ளியின் மேல்தளத்தில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாகூரில் ஒரு பள்ளியில் 9ஆம் வகுப்புப் படித்து வருபவர் 14 வயது மாணவி பஜ்ஜர் நூர். இவரை வகுப்பறையைச் சுத்தம் செய்யும்படி ஆசிரியர்களான பு‌ஷ்ராவும் ரெகானாவும் கூறியுள்ளனர். ஆனால், தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மற்றொரு நாளி வகுப்பறையைச் சுத்தம் செய்வதாக அந்த மாணவி கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர்கள், மாணவி பஜ்ஜர் நூரை மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்று அவரைத் தாக்கிய பின்னர் பள்ளியின் மேல்தளத்தில் இருந்து தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த அந்த மாணவி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இரண்டு ஆசிரியர்களும், இந்தச் சம்பவத்தை மறைத்ததற்காக பள்ளியின் தலைமை ஆசிரியையும் தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!