கோலாலம்பூர்: மலேசியாவின் பேங்க் நெகாரா அந்நியச் செலாவணி நட்டம் மீதான அரச ஆணையத்தின் விசாரணையில் சாட்சியமளிக்க முன்னாள் நிதி அமைச்சர் அன்வார் இப்ராகிம் அழைக்கப்படுவது பற்றி அரச ஆணையம் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது குறித்து ஆச்சரியம் அடைந்துள்ளதாக அன்வார் கூறுகிறார். தமது சாட்சியத்தைச் செவிமெடுக்காமல் இந்த அரச ஆணைய விசாரணை முடிவுற்றால் அது கேலிக் கூத்தாகும் என்றார். இதுவரையில் நடந்த விசாரணையில் தம்மைப் பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டது தாம் அந்த விசாரணையில் சாட்சியமளிக்க அனுமதிக்கப்பட வேண்டியது தட்ட முடியாததாக ஆகியுள்ளது என்று அவர் மேலும் கூறினார். அரசாங்கத்தின் முன்னைய தலைமைச் செயலாளரான முகம்மட் சீடெக் ஹசான் இந்த அரச ஆணைய விசாரணைக்குத் தலைமை ஏற்றுள்ளார். 1980-- 1990ஆம் ஆண்டுகளுக்கிடையில் பேங்க் நெகாரா அடைந்த அந்நியச் செலவாணி நட்டம் குறித்த ஆய்வு மேற்கொள்வது அரச ஆணையத்தின் பணியாகும். இக்காலக்கட்டத்தில் அன்வார் நிதி அமைச்சராகவும் மகாதீர் பிரதமராகவும் இருந்தனர்.
ஆர்சிஐ செலாவணி விசாரணை: “ஆச்சரியத்தில்” அன்வார் இப்ராகிம்
3 Sep 2017 09:07 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Sep 2017 08:19
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!