தமிழ்நாட்டில் கந்துவட்டி முதலைகளின் கொடுமைகள் சகித்துக்கொள்ள முடியாத ஒரு நிலையை எட்டிவிட்டதாகத் தெரிகிறது. கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியாளர் அலுவல கத்தில் நால்வர் அடங்கிய ஒரு குடும்பம் தீக்குளித்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்ட நிலையில் திங்கட்கிழமையன்று சேலத்தில் இதேபோன்ற வேறு ஒரு சம்பவம் நிகழவிருந்ததாக அதி காரிகள் தெரிவித்தனர்.
நெல்லைச் சம்பவத்தில் இசக்கிமுத்து, 27, என்ற கூலித் தொழிலாளியும் அவருடைய மனைவியான சுப்புலெட்சுமியும், 26, மதி ஆருண்யா, 4, மற்றும் அட்சயா, 1½, என்ற தங்கள் மகள்களுடன் திடீரென்று தீக் குளித்தனர். இந்தச் சம்பவத்தில் மூவர் பலியாகிவிட்டார்கள். இசக்கிமுத்து மட்டும் உயிருக் குப் போராடி வருகிறார். இசக்கி முத்து, முத்துலெட்சுமி என்ற பெண்ணிடமிருந்து தான் வாங்கிய 140,000 ரூபாய் கடனுக்காக ரூ. 234,000 திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் ஆனால் முத்துலெட் சுமி மேலும் மேலும் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாகவும் தெரி கிறது. இதன் தொடர்பில் இசக்கி முத்து ஆறு தடவை போலிசில் புகார் கொடுத்தும் போலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போன தால் குடும்பத்துடன் அவர் தீக் குளித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பில் முத்துலெட்சுமி உள்ளிட்ட மூன்று பேர் கைதாகியிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் நிகழ்ந்த அதே திங்கட்கிழமையன்று சேலம் அருகே உள்ள சின்னிசேகரபாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த 60 வயது கமலா என்பவரும் அவரின் இரண்டு மகன்கள், மற்றும் இரண்டு மருமகள்களும் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு கொடுக்கவிருந்தபோது அவர்கள் திடீரென மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டார்கள். ஆனால் அதிகாரிகள் அந்த ஐவரையும் உடனே காப்பாற்றிவிட்டார்கள்.