சான் அன்டோனியோ: அமெரிக் காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள பாப்டிஸ்ட் தேவாலயத்தில் ஒரு துப்பாக்கிக்காரன் கண்மூடித் தனமாக சுட்டதில் குறைந்தது 26 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் அந்த துப்பாக்கிக்காரனை துரத்திச் சென்ற உள்ளூர்வாசிகள் இரு வரை மக்கள் பாராட்டி வருகின் றனர். அந்த துப்பாக்கிக்காரன் அவனது காரில் தப்பிச்சென்ற போது தானும் மற்றொருவரும் சேர்ந்து அவனை துரத்திச் சென்ற தாக ஜோனி லான்ஜென்டோரப் என்பவர் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டெக்சஸ் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பிரார்த்தனை நடந்துகொண் டிருந்தபோது உள்ளே நுழைந்த துப்பாக்கிக்காரன் அங்கிருந்த மக்களை நோக்கி சுடத் தொடங் கியதாகக் கூறப்பட்டது. அந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் ஐந்து வயது முதல் 72 வயது வரையில் உள்ளவர்கள் என்றும் அந்த துப்பாக்கிச்சூட்டில் சுமார் 20 பேர் காயம் அடைந்ததாகவும் டெக்சஸின் பொது பாதுகாப்புத் துறை வட்டார இயக்குநர் ஃப்ரீமென் மார்ட்டின் தெரிவித்துள் ளார்.
அந்த தேவாலயத்தின் போதகரான ஃபிராங்க் போமிரா யின் 14 வயது மகளும் அந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக அந்த போதகரின் மனைவி கூறியுள்ளார். 26 பேரைக் சுட்டுக்கொன்ற துப்பாக்கிக்காரன் அந்த தேவாலயத்திற்கு சில மைல்கள் தொலைவில் அவனது காரில் இறந்துகிடந்ததாகவும் அந்த துப்பாக்கிக்காரன் வெள்ளை இன இளைஞர் என்று அடையாளம் கண்டுள்ளதாகவும் போலிசார் கூறினர்.
அந்த சந்தேக நபர் 26 வயதான டெவின் பாட்ரிக் கெல்லி என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கெல்லி அவனது மனைவியையும் குழந்தையையும் தாக்கி யதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு அமெரிக்க விமானப் படையிலி ருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கையில் பெரிய துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த அவன் பாதுகாப்பு உடைகளை அணிந் திருந்ததாக வட்டார இயக்குநர் ஃப்ரீமென் மார்ட்டின் கூறினார்.