கிளெமெண்டி பகுதியில் தனியார் வீடமைப்புக் கட்டடம் ஒன்றின் கூரையிலிருந்து கான்கிரீட் துண்டு 40 மாடிகள் கீழே விழுந்து விளையாட்டு மைதானத்தில் கிடந் தது. இடியுடன் கூடிய கடுமையான மழை பெய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதால் அந்த கான்கிரீட் துண்டு கட்டடத்திலி ருந்து பெயர்ந்து கீழே விழுந்த தாகக் கூறப்படுகிறது. கிளெமெண்டி அவென்யூ 4ல் உள்ள 'டிரெவெலிஸ்' எனும் வடி வமைத்து கட்டி விற்கும் திட் டத்தின் வீடமைப்புக் கட்டடத்தில் சென்ற வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் அந்தச் சம்பவம் நடந்துள்ளது.
புளோக் 311Cயின் மேல் தளத் தில் மின்னல் தாக்கியதால் ஏற்கெ னவே செய்து வைக்கப்பட்ட கான் கிரீட் அமைப்பிலிருந்து ஒரு பகுதி பெயர்ந்து கீழே உள்ள விளை யாட்டு மைதானத்தில் விழுந்ததாக அந்தக் கட்டடத்தை கட்டிய 'இ எல் டிவெலப்மண்ட்' நிறுவனம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறியது. மழை பெய்ததால் யாரும் மைதா னத்தில் இல்லை என்றும் அந்த நிறுவனப் பேச்சாளர் கூறினார். அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர் கட்டடத்தைச் சோதனை செய்து கட்டடத்தின் அமைப்பு வலுவாக உள்ளதை உறுதி செய்துள்ளார் என்றும் நிறுவனம் தெரிவித்தது.
கான்கிரீட் பெயர்ந்த பகுதியில் இருந்து மீண்டும் அவை விழக் கூடும் என்ற அச்சத்தால் அதை அப்புறப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக புளோக் 311A, 311B, 311C ஆகியவற்றின் மத்தியில் உள்ள விளையாட்டு மைதானம் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளது.