சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு தைப்பூசம் 2018 ஜனவரி 31ஆம் தேதி புதன்கிழமை நடைபெறும். அன்று சிராங்கூன் ரோட்டில் இருக்கும் ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் இருந்து தேங் ரோட்டில் இருக்கும் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்குப் பக்தர்கள் பால் குடம், அலகுக் காவடி எடுத்து முருகப்பெருமானுக்குக் காணிக்கைச் செலுத்துவார்கள். இதற்கான பங்கெடுப்புச் சீட்டு கள் இந்த இரண்டு ஆலயங்களி லும் 2017 டிசம்பர் 14 வியாழக் கிழமை முதல் விற்பனைக்கு இருக்கும். அடுத்த ஆண்டின் தைப்பூச விழா சந்திரகிரகணம் அன்று வருகிறது.
ஆகையால் ஊர்வல நேரத்தில் கொஞ்சம் மாற்றம் இருக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். சிராங்கூன் ரோடு பெருமாள் கோயிலிலிருந்து 2018 ஜனவரி 30ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு ஊர்வலம் தொடங்கும். ஊர்வலம் அடுத்த நாள் மாலை 6.30 மணி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப் பட்டு இருக்கிறது. பக்தர்கள் அனைவரும் ஜனவரி 31 மாலை 6.30 மணிக்குள் தேங் ரோடு ஆல யத்தை அடைந்துவிடவேண்டும்.