சிங்கப்பூரில் ஜாலான் பூரோ நோக்கிச் செல்லும் வெஸ்ட் கோஸ்ட் மேம்பாலச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் 33 வயது இந் திய நாட்டு கட்டுமான ஊழியர் மாண்டார். இரண்டு லாரிகள், ஒரு சிறிய லாரி சம்பந்தப்பட்ட அவ்விபத்து குறித்து தங்களுக்கு வெள்ளிக் கிழமை மாலை 4.49 மணிக்குத் தெரிவிக்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் போலி சார் கூறினர். சாலையில் அசைவற்றுக் கிடக் கும் ஆடவர் ஒருவரை துணை மருத்துவ ஊழியர்கள் கவ னித்துக்கொண்டிருக்கும் படம் Safety Watch-SG ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டது.
அந்த ஆடவர் சம்பவ இடத் திலேயே மாண்டுவிட்டதாக துணை மருத்துவர்கள் அறிவித் தனர். சாலையில் இருந்த சிறு பள்ளத்தைச் செப்பனிடும் வேலை யில் கட்டுமான ஊழியர் ஈடுபட்டு இருந்ததாகவும் அப்போது அரு கில் லாரியும் சிறிய லாரி ஒன்றும் நிறுத்தப்பட்டு இருந்ததாகவும் தெரிகிறது. ஊழியர் தமது வேலையை முடித்துக்கொண்டு பாதுகாப்பு சாதனங்களை அகற்றிவிட்டு புறப் படுவதற்காக லாரியை நோக்கிச் சென்றபோது வேகத்தைக் கட்டுப் படுத்த இயலாத வேறொரு லாரி அங்கிருந்த சிறிய லாரி மீது மோதியதாக நம்பப்படுகிறது.
லாரியால் பலமாகத் தள்ளப் பட்டதால் நிலைகுலைந்த சிறிய லாரி அந்த வெளிநாட்டு ஊழியர் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே அவர் மாண்டதாக அறிவிக்கப்பட்டதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் உறுதி செய்தது. மோதிய லாரி ஓட்டுநரான 51 வயது ஆடவர் தேசிய பல்கலைக் கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவத்தை போலிசார் விசாரித்து வருகின்றனர்.