சிங்கப்பூரில் ஆண்டுமுழுவதும் தமிழ் சார்ந்த பல நிகழ்வுகள் நடைபெற் றாலும், ஏப்ரல் மாதத்தின் தமிழ்மொழி விழா அனைவரது உள்ளத்திலும் உணர்விலும் நீங்கா இடம்பெற்றுள்ளது. தமிழர் மொழி, கலை, பண்பாடு, கலாசாரம் சார்ந்த கூறுகளைக்கொண்ட படைப்புகளைப் பொதுமேடையில் வெளிக்கொணரத் தளம் அமைத்து, வயதுவரம்பின்றி அனைவருக்கும் சரி சம வாய்ப்பு அளிப்பதே தமிழ்மொழி விழாவின் தலையாய நோக்கமாகும். அதற்கேற்ப, கடந்த சில ஆண்டுக ளாகவே தமிழ்மொழி விழாவின்போது கணிசமான எண்ணிக்கையில் அமைப்புகள் தாமாக முன்வந்து நிகழ்ச் சிகளைப் படைக்க எங்களை அணுகு வதிலிருந்து பலருக்கும் வளர்தமிழ் இயக்கம் தளம் அமைத்துக்கொடுத்து உள்ளது என்ற மனதிருப்தி ஏற்படுகின் றது.
இவர்களில் சிலருக்கு இவ் விழாவே மொழி வளர்ச்சி சார்ந்த முதல் முயற்சியாக இருப்பது எங்க ளுக்கு கூடுதல் மகிழ்ச்சி. சிங்கப்பூரில் தமிழ்மொழி சார்ந்த அனைத்து அமைப்புகளையும் தனிநபர் தமிழ் உணர்வை வளர்க்கும் தமிழ்மொழி விழா! ஆர். ராஜாராம், தலைவர், வளர்தமிழ் இயக்கம் களையும் ஒன்றிணைத்து, ஒரு சமூக மாக மொழியைக் கொண்டாட வழிய மைக்கும் முக்கிய பொறுப்பு வளர்தமிழ் இயக்கத்தைச் சார்ந்ததாகும். இந்தப் பணியை ஒவ்வோர் ஆண்டும் வளர்தமிழ் இயக்கம் முனைப்புடன் செய்து வந்துள்ளது. ஆண்டு முழுவதும் புதிய அமைப்பு களையும் மொழிசார் திறனாளர்களையும் கண்டறிந்து, அவர்களைத் தமிழ்மொழி விழாவில் பங்கெடுக்கத் தொடர் ஊக்கம் அளித்துவரும் பணியிலும் வளர்தமிழ் இயக்கம் ஈடுபட்டு வருகின்றது.
இம்முயற்சியானது தமிழ்மொழி புதிய பரிணாமத்திற்குச் செல்லவும் புதிய பார் வைகளை முன்னெடுத்துச் செல்லவும் வழிவகுக்கும். மாதம் முழுவதும் நடைபெறும் தமிழ் மொழி விழா என்பது அனைவரும் ஒன்றி ணைந்து மொழி வளர்க்கும் முயற்சியும் கூட! வளர்தமிழ் இயக்கத்தோடு, அரசாங் கம் சார்ந்த அமைப்புகளில் சிலவும் இவ் விழாவிற்கு வலுக்கொடுத்து வருகின்றன. தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு, இரு மொழிக்கல்விக்கான லீ குவான் இயூ நிதி, தேசிய கலைகள் மன்றம் போன் றவை உதாரணத்திற்குச் சில! ஒரு நாடாக தமிழ்மொழியைக் கொண் டாடும் பட்சத்தில் தமிழ்மொழிக்கு உரிய அங்கீகாரம் இன்னும் கூடுதலாக அமையப் பெறுவதையும் காண முடிகின்றது.